குஜராத்துக்கு பதிலடி கொடுக்குமா சென்னை ? - இன்று 2 லீக் போட்டிகள்

 
csk new

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன். முதல் போட்டியில் சென்னை-குஜராத் அணிகளும், இரண்டாவது போட்டியில் லக்னோ-ராஜஸ்தான் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

csk

பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 8ல் தோல்வி அடைந்துள்ள நிலையில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் 2020ம் ஆண்டுக்கு பின்னர் இரண்டாவது முறையாக ப்ளே அஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்துள்ளது. இருந்த போதிலும் மீதமுள்ள 2 போட்டிகளை வெற்றி பெற்றி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய சென்னை அணி முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 9 போட்டியில் வெற்றியும், 3 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதோடு, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

rr

இதேபோல் இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 8 போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள லக்னோ அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அதிகாரப்பூர்வமாக உள்ளே சென்றுவிடும். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 7 போட்டியில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது.