பேர்ஸ்டோ அதிரடி! ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்கள் இலக்கு

 
Bairstow

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 189 ரன்கள் சேர்த்துள்ளது. 

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய 52வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அனியும், மயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங் அகர்வால் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

PBKS

இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் 12 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்ததாக வந்த பானுகா ராஜபக்சே 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானி பேர்ஸ்டோ அரைசதம் விளாசினார். இந்நிலையில் கேப்டன் மயங் அகர்வால் 15 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக பேர்ஸ்டோவும் 56 ரன்களில் வெளியேறினார். அடுத்தாக வந்த ஜித்தேஷ் சர்மா மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் அதிரடி காட்டினர். லிவிங்ஸ்டன் 22 ரன்களில் வெளியேறிய நிலையில், ஜித்தேஷ் சர்மா 18 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது.