ஐசிசி-யின் டி20 உலக கோப்பை கனவு அணி - இந்தியாவில் இந்த இருவருக்கு வாய்ப்பு!

 
eng

டி20 உலக கோப்பை தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில், ஐசிசி டி20 உலக கோப்பைக்கான கனவு அணியை அறிவித்துள்ளாது. 

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. சூப்பர் 12 சுற்றின் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில், அதில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

eng vs pak

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி தொடக்கம் முதலே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களும் எடுத்தனர். 

eng

இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், இறுதியில் சிறப்பாக விளையாடியது. அந்த அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், இறுதியில் சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் 1 ரன்னில் வெளியேறிய நிலையில், அடுத்த வந்த பிலிப் சால்ட் 10 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய கேப்டன் பட்லர் 26 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில், நிதானமாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை நிலைத்து நின்று அணியை வெற்றி பெற வைத்தார். அவர் அரைசதம் அடித்ததோடு கோப்பயை வெல்லவும் முக்கிய பங்காற்றினார். இறுதியாக இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து மதிப்புமிக்க அணியை ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அந்த மதிப்புமிக்க அணியில் இந்தியாவில் இருந்து இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த அணியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அலெக்ஸ் ஹேலஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 3வது மற்றும் 4வது இடத்துக்கு தொடரில் அதிக ரன்கள் அடித்த விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 5வது இடத்துக்கு நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ் மற்றும் 6வது இடத்துக்கு ஜிம்பாப்வே ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசாவும், 7 மற்றும் 8 இடங்களில் முறையே பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷதாப் கானும், உலகக்கோப்பையின் தொடர் நாயகன் சாம் கரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 9, 10, 11 இடங்களுக்கு ஆன்ரிச் நோர்ட்சே, மார்க் வுட், ஷாகின் அப்ரிடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அணியில் 12வது வீரராக இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளார்.