அரையிறுதியுடன் வெளியேறிய இந்திய அணி - பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

 
IND

டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் தோற்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு ஓவலில் நேற்று முன் தினம் நடைபெற்ற  2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்திய அணி அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது. 
 
இந்த நிலையில் அரையிரயிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பரிசு தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. முன்னர் ஐசிசி அறிவித்தபடி அதன்படி சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலரும், (இந்திய ரூபாய் மதிப்பில் 13 கோடி) 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அந்த வகையில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா 3.22 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைக்கும்.