நான் சூர்யகுமார் யாதவுக்கு பந்துவீசினால் அவ்வளவு தான் - கேப்டன் ஹர்திக் பாண்டியா புகழாரம்

 
Hardick

விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் பேட்டிங்கின் போது சூர்யகுமார் யாதவ் அனைவரையும் ஆச்சரியப்படவைக்கிறார் என கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். 

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது.   டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்காட்டக்காரராக களம் இறங்கிய இசான் கிசன் ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடினார். 16 பந்துகளை சந்தித்த அவர், 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 45 பந்துகளில் சதம் அடித்த அசத்தினார். சர்வதேச டி20 அரங்கில் அவர் அடிக்கும் 3வது சதம் இதுவாகும். இறுதியாக சூரியகுமார் யாதவ் 112 ரன்ள் குவித்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது.

Suryakumar Yadav

229 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இதனால் அந்த அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .ஏற்கனவே நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடாரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

suryakumar

இப்போட்டியில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 51 பந்துகளில் 112 ரன்கள் குவித்த சூர்யகுமார் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியின் வெற்றிக்கு பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் பேட்டிங்கின் போது சூர்யகுமார் அனைவரையும் ஆச்சரியப்படவைக்கிறார். பேட்டிங் மிகவும் சுலபம் என்று சூர்யகுமார் எங்களிடம் கூறுகிறார். நான் அவருக்கு பந்து வீசினால், அவரின் பேட்டிங் மற்றும் அவர் அடிக்கும் ஷார்ட்களை பார்த்தால் என் மனம் உடைந்துவிடும்' என்றார்.