டி20 உலக கோப்பை - ஜிம்பாப்வே அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்

 
ban

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 150 ரன்கள் குவித்தது.

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்குள் நுழையும். 

இந்நிலையில், பிரிஸ்பேனில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 12 குரூப் 2 பிரிவு போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாண்டோ 71 ரன்கள் எடுத்தார். இதனால் ஜிம்பாப்வே அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.