200 வது சிக்ஸர் விளாசிய ரோஹித் ஷர்மா – இரண்டாவது இந்தியர்
ஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் யாரும் கணிக்க முடியாத அளவுக்கு போட்டியின் தன்மை இருக்கிறது. பலம் கொண்ட அணி எனப் பலரும் கூறும் அணி அன்றைய போட்டியில் தோற்கிறது. யாருமே கவனம் செலுத்தாத சிறிய அணி அசத்தலான வெற்றியைப் பெறுகிறது.
இன்று மும்பை இண்டியன்ஸ் அணியோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.
முதலில் பேட்டிங் செய்யும் மும்பை இண்டியன்ஸ் அணியில் ஓப்பனிங் விளையாடி வரும் ரோஹித் ஷர்மா 200 வது சிக்ஸர் விளாசியிருக்கிறார். 200 சிக்ஸர்களைக் கடந்த இரண்டாவது இந்தியர் ரோஹித் ஷர்மா. இதற்கு முன் எம்.எஸ்.தோனி 212 சிக்ஸர் விளாசியிருக்கிறார்.
முதல் இடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார் அவரின் சிக்ஸர் 326. இரண்டாம் இடத்தில் டி வில்லியர்ஸ் 214. மூன்றாம் இடத்தில் தோனி, நான்காம் இடத்தில் ரோஹித் ஷர்மா.
ஐந்தாம் இடத்தில் 194 சிக்ஸர்களோடு சுரேஷ் ரெய்னா இடம் பிடித்திருக்கிறார். அவர் இந்த ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. ஆடியிருந்தால் நிச்சயம் 200 சிக்ஸர்களைக் கடந்திருக்கக்கூடும்.