சிறப்பு நலவாழ்வு முகாம்: யானைகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

 

சிறப்பு நலவாழ்வு முகாம்: யானைகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்களுக்கு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி அருகே பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டு தோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறும். தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நடக்கும் இந்த முகாமில், பல்வேறு கோவில் யானைகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சிறப்பு நலவாழ்வு முகாம்: யானைகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

அதில், யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் பவானி ஆற்றுப் படுகையில் 48 நாட்களுக்கு நடைபெற உள்ளதாகவும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான யானைகளுக்காக சிறப்பு முகாம் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என மருத்துவ சான்று பெற்ற பிறகே முகாமிற்கு அனுப்ப வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், யானைகளுடன் முகாமுக்கு அனுப்ப உள்ள பணியாளர்களுக்கும் பரிசோதனை கட்டாயம் என்றும் நலவாழ்வு முகாமில் யானைகள் அருகே பொதுமக்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும் நோயுற்ற, தொற்று நோய் பாதிப்புள்ள யானைகளை முகாமுக்கு அழைத்து வரவேண்டியதில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.