திமுகவில் சீட் கிடைக்காதவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…!!

 

திமுகவில் சீட் கிடைக்காதவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…!!

திமுகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவில் சீட் கிடைக்காதவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பலர் விருப்பமனு அளித்திருந்தும், வாய்ப்பு கேட்ட அனைவர்க்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டதா? என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். காரணம் 8,000 பேர் விருப்பமனு அளித்தாலும் 234 தொகுதிகள் மட்டுமே உள்ளதால் இந்த முடிவு வழக்கமானது தான் என்பது பலரும் அறிந்த ஒன்று. இருப்பினும் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவோர், உழைப்புக்கு சன்மானம் கிடைக்கவில்லை என்று பலர் அதிருப்தியிலும் இருப்பார்கள். அதிமுகவில் சீட் கிடைக்கவில்லை என்று எம்எல்ஏ சேந்தமங்கலம் சந்திரசேகரன், பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் .

திமுகவில் சீட் கிடைக்காதவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…!!

அதேபோல் திமுகவிலும் சிலர் அதிருப்தியில் உள்ளனர். இதனால் கட்சியில் பிரச்னை வரக்கூடாது என்று தான், சீட் கிடைக்கவில்லை என்று பிடிவாதம் பிடித்தால் – நெருக்கடி ஏற்படுத்தினால் அத்தகையோர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனும் உயர்ந்த தகுதியை பெருமளவு இழந்து விடுகிறார்கள். அவர்களது கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு கேள்விக்குள்ளாகிவிடும் என்று ஸ்டாலின் சூசகமாக கடிதம் எழுதினார்.

திமுகவில் சீட் கிடைக்காதவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…!!

இந்நிலையில் திமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை பட்டியலிட திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளாராம். அதிருப்தியாளர்களை சரிகட்ட தற்போது முடிவெடுத்துள்ள ஸ்டாலின், உண்மையான விசுவாசிகளை அடையாளம் காண ஒரு டீமை களமிறக்கி அவர்களுக்கு வாரியங்களில் தலைவர் பதவி கொடுக்க முடிவெட்டுள்ளாராம். பொதுவாக திமுகவில் வாரியத் தலைவர் பதவி அதிகாரிகளுக்கு மட்டும் தான் இதுவரை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை அதை கட்சிக்காரர்களுக்கு கொடுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளாராம். இந்த செய்தி அதிருப்தியாளர்கள் மத்தியில் சற்று நிம்மதியை அளித்துள்ளாதாம்.