எஸ்.பி.பியின் உடல்நிலை நேற்றைவிட சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளது: மகன் சரண்

 

எஸ்.பி.பியின் உடல்நிலை நேற்றைவிட சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளது: மகன் சரண்

பிரபல பாடகர் எஸ்பிபி வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பிரபலமான ஒரு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சென்ற வாரம் அவரின் உடல்நிலை திடீரென கவலைக்கிடமானது. அப்போது அந்த மருத்துவமனையின் டாக்டர்கள் லண்டன் ,ஜெர்மன் நாட்டு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சில அதி நவீன சிகிச்சைகள் செய்தனர். அதுமட்டுமின்றி திரையுலகினர் அனைவரும் சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதனால் அவரின் உடலில் திடீரென நல்ல முன்னேற்றம் தெரிந்தது .இந்த முன்னேற்றத்தால் உற்சாகமடைந்த அவரின் மகன் சரண் ஊடகத்தில் தோன்றி அவரின் தந்தை குணமாக கூட்டு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ,தங்களின் கூட்டு பிரார்த்தனையால்தான் தந்தை எஸ்பிபி குணமாகி வருவதாகவும் ,இப்போது நல்ல நினைவுடன் இருப்பதாகவும் ,பாடலை கேட்பதாகவும் கூறினார் .

எஸ்.பி.பியின் உடல்நிலை நேற்றைவிட சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளது: மகன் சரண்

இன்றைய நிலவரப்படி அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் எஸ்.பி.பியின் உடல்நிலை நேற்றைவிட சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அவரின் மகன் சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த சரண், இன்று புதிதாக மருத்துவமனையிலிருந்து அறிக்கை எதுவும் வரவில்லை என தெரிவித்தார்.