எஸ்.பி.பி. குறித்து ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம்: மகன் சரண்
பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்பிபி உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அதன் எதிரொலியாக எஸ்பிபி தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் எஸ்.பி.பியின் மகன் எஸ்பி சரண் வீடியா வெளியிட்டுள்ள வீடியோவில், “பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது. மெதுவாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. தந்தையை தினமும் பார்த்து வருகிறேன். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என வெளியான தகவல் தவறு; ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.