அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் மதுரையை இரண்டாவது தலைநகராக்கக்கோரி கலந்துரையாடல்!
Aug 21, 2020, 10:58 IST1597987720000
தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து கூறிய முதல்வர் பழனிசாமி, மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது அமைச்சர்களின் கருத்தே தவிர அரசின் கருத்தல்ல என்றார்.
இந்நிலையில் மதுரை இரண்டாவது தலைநகராக அறிவிக்கக் கோரி தென்மாவட்ட வர்த்தகர்கள் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடக்கும் கலந்துரையாடல் தென்மாவட்ட வர்த்தகர்கள் கலந்து கொண்டுள்ளனர். மதுரை ,விருதுநகர் ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழில் வர்த்தகர்கள் பங்கேற்றுள்ளனர்.