டெல்லி துக்ளகாபாத் குடிசை பகுதிகளில் பயங்கர தீ விபத்து…. தீ அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வண்டிகள்

 

டெல்லி துக்ளகாபாத் குடிசை பகுதிகளில் பயங்கர தீ விபத்து…. தீ அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வண்டிகள்

டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள துக்ளகாபாத் குடிசை பகுதிகளில் நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு 30 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல். அதேசமயம் பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டு இருக்கும் என தெரிகிறது.

டெல்லி துக்ளகாபாத் குடிசை பகுதிகளில் பயங்கர தீ விபத்து…. தீ அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வண்டிகள்

இந்த தீ விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்ட உடனேயே அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டனர். அதேசமயம் பெரிய தீ விபத்து என்பதால் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்தனர். இது தொடர்பாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், தீ விபத்து குறித்து எங்களுக்கு 12.15 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடததுக்கு 30 தீயணைப்பு வண்டிகள் சென்றன. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதுவரை (அதிகாலை 3.30 மணி வரை) இந்த விபத்தில் எந்தவொரு உயிர் இழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என தெரிவித்தார்.

டெல்லி துக்ளகாபாத் குடிசை பகுதிகளில் பயங்கர தீ விபத்து…. தீ அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வண்டிகள்

தென்கிழக்கு டெல்லியின் காவல்துறை துணை ஆணையர் ராஜேந்திர பிரசாத மீனா துக்ளகாபாத் தீ விபத்து குறித்து கூறுகையில், துக்ளகாபாத் குடிசைகளில் தீ விபத்து குறித்து எங்களுக்கு 1 மணிக்கு தகவல் கிடைத்தது. அனைத்து காவல்துறை பணியாளர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். 1,000 முதல் 2,000 குடிசைகளில் தீ பற்றி இருக்கும் என தெரிவித்தார்.