பருவம் மாறி ,உருவம் மாறி கொரானா வந்தாலும் ,நம்மை உருக்குலையாமல் காக்கும் சூப்

 

பருவம் மாறி ,உருவம் மாறி கொரானா வந்தாலும் ,நம்மை உருக்குலையாமல்  காக்கும் சூப்

கொரோனா மீண்டும்  வரும்போது எலும்புகளை வலிமையாக்க நீங்கள் முருங்கைக்காய் சூப் குடிக்கலாம். இதில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. இதன் காரணமாக மனச்சோர்வு, பதட்டம் மற்றும் சோர்வு போன்ற சிக்கல்களும் சரியாகின்றன. இது தவிர பல வித பச்சைக் காய்கறிகளைப் போட்டும் சூப் செய்து குடிக்கலாம்.

 சீரகம், தனியா மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்த சூப்:

கொரோனா மீண்டும்  வரும்போது, ​​சீரகம், தனியா மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றால் ஆன தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். இது இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு பதற்றத்தையும் நீக்குகிறது. இதன் மூலம், நமது செரிமான அமைப்பும் சீராகிறது. உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க நீங்கள் மூலிகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பருவம் மாறி ,உருவம் மாறி கொரானா வந்தாலும் ,நம்மை உருக்குலையாமல்  காக்கும் சூப்

வரமல்லி சூப்

வரமல்லி – 2 ஸ்பூன்

இஞ்சி – 2 சிறிய துண்டுகள்

ஏலக்காய் – 2,

நாட்டு சர்க்கரை – 2 ஸ்பூன்.

செய்முறை

முதலில் இஞ்சி,மல்லி, 2 ஏலக்காய் தனித்தனியாக எடுத்து இடித்து வைத்துக்கொள்ளவும். அடுத்து பாலை கொஞ்சம் சூடு படுத்தி எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி, மல்லி, ஏலக்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்தவுடன், கடைசியாக 2 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையையும் இந்த தண்ணீரோடு சேர்த்து நன்றாக கரைத்து விடவும்.

அடுத்து இந்த தண்ணீர் நன்றாக 5 நிமிடம் கொதித்தவுடன் வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பால் சேர்க்காமல் இந்தத் தண்ணீரை அப்படியே பருகினாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான்.

இதில் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவையை சேர்க்க காய்ச்சிய பாலை ஊற்றி கலந்து பரிமாறினால் சூப்பரான மல்லி காபி தயாராகிவிடும்.