உண்மையை மறைத்த மகன்; தூக்கில் தொங்கிய பெற்றோர்!

 

உண்மையை மறைத்த மகன்; தூக்கில் தொங்கிய பெற்றோர்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் தங்கமணி- ரத்னா தம்பதி. விசைத்தறி தொழிலாளர்களான இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், மகன் என்ஜினீயர் ராஜா அண்ணாமலைக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர்.

உண்மையை மறைத்த மகன்; தூக்கில் தொங்கிய பெற்றோர்!

அழகப்பம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ராஜா அண்ணாமலைக்கு நிச்சயித்து கடந்த மாதம் பேசி முடித்துள்ளனர். ஆனால் அந்த பெண் வேறு ஒருவரை காதலிப்பதை தெரிந்து கொண்ட ராஜா அண்ணாமலை, வீட்டில் காரணத்தை கூறாமலே திருமணம் வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தங்கமணி – ரத்னா ஆகிய இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

உண்மையை மறைத்த மகன்; தூக்கில் தொங்கிய பெற்றோர்!

இதுகுறித்து மகுடஞ்சாவடிபோலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.