சொத்து தகாராறு: மாமியாரை அடித்து கொன்ற மருமகன்
Jul 27, 2020, 19:12 IST1595857355000
மதுரை அருகே சொத்து தகாராறால் மாமியாரை அடித்து கொன்ற மருமகனின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ரயில்வே பீட்டர் ரோடு பகுதியைச் சேர்ந்த மாயக்கிருஷ்ணன் அவரது மனைவி முத்துலெட்சுமியை அவரது மருமகன் கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்குமார் என்பவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சொத்து தகராறு ஏற்பட்டு தாக்கினார். இதனால் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முத்துலெட்சுமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.