ரூ.25 லட்சம் மதிப்புள்ள சொத்தை அபகரித்து வீட்டை விட்டு துரத்திய மகன் : வயது முதிர்ந்த தம்பதி வேதனை!

 

ரூ.25 லட்சம் மதிப்புள்ள சொத்தை அபகரித்து வீட்டை விட்டு துரத்திய மகன் : வயது முதிர்ந்த தம்பதி வேதனை!

ரூ. 25 லட்சம் மதிப்புள்ள சொத்தை அபகரித்துக் கொண்டு தாய் தந்தையை மகன் விரட்டியடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் கணபதி -சந்திராம்மா தம்பதி. இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த 10ஆண்டுகளுக்கு பிள்ளைகளுக்கு தலா ஒரு ஏக்கர் என சொத்தை பிரித்து கொடுத்துள்ளார்.

ரூ.25 லட்சம் மதிப்புள்ள சொத்தை அபகரித்து வீட்டை விட்டு துரத்திய மகன் : வயது முதிர்ந்த தம்பதி வேதனை!

தங்கள் இறுதிகாலத்தை கருத்தில் கொண்டு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 42 சென்ட் இடத்தை தனது பெயரில் கணபதி வைத்திருந்துள்ளார். அப்போது மூன்றாவது மகன் மனோகரன் கடைசி காலத்தில் ஏன் தனியாக கஷ்டப்படுகிறீர்கள். சொத்தை என் பெயருக்கு மாற்றி கொடுங்கள். உங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி சொத்தை தனது பெயருக்கு மாற்றியதாக தெரிகிறது.

ரூ.25 லட்சம் மதிப்புள்ள சொத்தை அபகரித்து வீட்டை விட்டு துரத்திய மகன் : வயது முதிர்ந்த தம்பதி வேதனை!

இதையடுத்து சில மாதங்களில் தாய் – தந்தையை மகன் மனோகரன் வீட்டை விட்டு அடித்து துரத்தியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பேரம்பாக்கம் அருகே வசித்து வருகிறார்கள். மகன் தங்கள் சொத்துக்களை அபகரித்து விட்டதாக பல துறைகளில் முறையிட்டும் எந்த பலனும் இல்லை என்கிறார் முதியவர் கணபதி. எனவே தமிழக அரசு தனது மகன் அபகரித்த சொத்தை மீட்டுத் தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.