தாயை கொல்ல முயற்சி : பாலில் விஷம் கலந்த மகன் கைது!

 

தாயை கொல்ல முயற்சி : பாலில் விஷம் கலந்த மகன் கைது!

திருவண்ணாமலை அருகே தாயை கொல்ல மகன் பாலில் விஷம் கலந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வசித்து வருபவர் செல்வநாயகம். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மேரி தனது பெயரில் இருக்கும் வீட்டு மனை ஒன்றை தனது இரண்டாவது மருமகள் பேரில் எழுதி வைத்துள்ளார். இதை தெரிந்துகொண்ட மூத்த மகன் வினோத், தனது தாயாரிடம் சண்டை போட்டுள்ளார் அதோடு அவரை பழிவாங்கும் திட்டமிட்டுள்ளார்.

தாயை கொல்ல முயற்சி : பாலில் விஷம் கலந்த மகன் கைது!

மேரி தான் வளர்த்து வரும் பசுவின் பாலை கறந்து ஒரு பால் கம்பெனிக்கு விற்பராம். நேற்று வழக்கம் போல, அவர் பாலை எடுத்துக்கொண்டு ஜான்பால் என்பவரிடம் கொடுத்திருக்கிறார். ஜான்பால் பாலை வாங்கிக் கொண்ட போது, அதிலிருந்து வித்தியாசமான வாடை வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், பாலின் நிறம் சற்று மாறி இருந்துள்ளது.

சந்தேகமடைந்த ஜான்பால் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் பாலில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மேரியை கொலை செய்வதற்காக அவரது மகன் வினோத் அந்தப் பாலில் விஷத்தை கலந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வினோத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் விஷம் கலந்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.