தாயை கழுத்தை அறுத்துக் கொன்ற மகன் கைது

 

தாயை கழுத்தை அறுத்துக் கொன்ற மகன் கைது

புதுச்சேரியில் மரத்தை வெட்டியதால் திட்டிய தாயை கழுத்தை அறுத்துக் கொன்ற மனநலம் குன்றிய மகனை போலீசார் கைது செய்தனர்.

தாயை கழுத்தை அறுத்துக் கொன்ற மகன் கைது

அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மனநலம் குன்றியவரான விஷ்ணு, 2 நாட்களுக்கு முன் வீட்டுக்கு முன்பிருந்த மரத்தை வெட்டியதால், தாய் வசந்தாவுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து தாய் வசந்தாவின் கழுத்தை அறுத்துவிட்டு விஷ்ணு தப்பியோடியதாக கூறப்படுகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் வசந்தாவை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கழுத்தில் இருந்து ரத்தம் கசிந்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வசந்தா உயிரிழந்தார்.