சோளிங்கர் காவல் உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

 

சோளிங்கர் காவல் உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

ராணிப்பேட்டை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சோளிங்கர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜெயகுமார்(57). இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் வேலூர் பிஷப் டேவிட் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி பணியில் இருந்த ஜெயக்குமாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

சோளிங்கர் காவல் உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

இதனால், அவர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால், ஜெயக்குமார் வாலாஜாவில் உள்ள மாவட்ட அரசு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கன்னிகாபுரம் சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்தார். கொரோனாவால் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோளிங்கரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.