கழுத்தில் சுற்றிக் கொண்ட பாம்பு… 2 மணி நேரமாக போராடிய சிறுமி!

 

கழுத்தில் சுற்றிக் கொண்ட பாம்பு… 2 மணி நேரமாக போராடிய சிறுமி!

மகாராஷ்டிரா அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்தில் நாகப்பாம்பு ஒன்று சுற்றிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் வார்தா பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமி உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டுக்குள் நுழைந்த நாகப்பாம்பு ஒன்று சிறுமியின் கழுத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. சிறுமி கூச்சலிட்டுதும் அருகே உறங்கிக் கொண்டிருந்த தாய் கண் விழித்து பார்த்து போது, சிறுமியின் கழுத்தில் பாம்பு சுற்றிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினருக்கு உடனே தகவல் கொடுத்துள்ளார்.

கழுத்தில் சுற்றிக் கொண்ட பாம்பு… 2 மணி நேரமாக போராடிய சிறுமி!

சிறுமியின் அருகே நெருங்கினால் பாம்பு சிறுமியை கொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அதனை நெருங்காமல் குடும்பத்தினர் விலகியே நின்று கொண்டு இருந்துள்ளனர். பிறகு, பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிறுமி அசையாமல் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். பாம்புக்கு பயந்து சிறுமி சுமார் இரண்டு மணி நேரமாக அசையாமல் அதே இடத்தில் படுத்துக் கொண்டு இருந்துள்ளார். பின்னர் பாம்பு மெல்ல மெல்ல சிறுமியை விட்டு விலகிய நிலையில் பயத்தில் சிறுமி அசைந்ததால் உடனே கையில் கடித்துள்ளது. இதையடுத்து, சிறுமியை மீட்ட கிராமத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். நான்கு நாட்களுக்கு பிறகு சிறுமி குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.