மெல்பேர்னில் மீண்டும் ஆறு வார ஊரடங்கு! – கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிரடி

 

மெல்பேர்னில் மீண்டும் ஆறு வார ஊரடங்கு! – கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிரடி

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கொரோனா வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து மீண்டும் ஆறு வாரங்களுக்கு நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வர வேண்டும் என்று சுகாதாரப் பணியாளர்கள் கூறிவந்தனர்.

மெல்பேர்னில் மீண்டும் ஆறு வார ஊரடங்கு! – கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிரடி
இந்த நிலையில் மெல்பேர்ன் நகரில் நாளை முதல் ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விக்டோரியா மாகாணத்தின் ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூ கூறுகையில், “புதன்கிழமை நள்ளிரவு முதல் மெல்பேர்ன் மெட்ரோபாலிடன் பகுதியில் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட, அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே வரலாம். கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.

மெல்பேர்னில் மீண்டும் ஆறு வார ஊரடங்கு! – கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிரடி
விக்டோரியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் மெல்பேர்ன் நகரத்தை சேர்ந்தவர்கள். எனவே, சமூக பரவல் என்ற நிலைக்கு கொரோனா செல்வதைத் தடுக்க ஆறு வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வடக்கு மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் தன்னுடைய மாகாண எல்லையை மூடியது. 1919ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃபுளு பரவிய நேரத்தில் இரண்டு மாநில எல்லைகளும் கடைசியாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.