தொடர் சிகிச்சையில் சிவசங்கர் பாபா : சிபிசிஐடி போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

 

தொடர் சிகிச்சையில் சிவசங்கர் பாபா : சிபிசிஐடி போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பாலியல் புகாரில் சிக்கி சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர் சிகிச்சையில் சிவசங்கர் பாபா : சிபிசிஐடி போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபா நடத்தி வந்த சிலர் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. ஆன்மிகம் என்ற பெயரில் சிறுமிகள் மீது சிவசங்கர் பாபா பாலியல் வன்முறையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இதனால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் அவர் அண்மையில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டார்.

கைதுக்கு முன்பாகவே நெஞ்சுவலி காரணமாக சிவசங்கர் பாபாவுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது சிபிசிஐடி போலீசார் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல்நலக்குறைவு ஏற்படவே தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர் சிகிச்சையில் சிவசங்கர் பாபா : சிபிசிஐடி போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இந்நிலையில் போக்ஸோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவின் மருத்துவ அறிக்கையை போலீஸ் தாக்கல் செய்தது. போலீஸ் காவலில் எடுக்க சிவசங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட பட்டிருந்ததால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருகிறார்.சிவசங்கர் சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார். இதையடுத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அவரை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரிப்பர் என்று கூறப்படுகிறது.