‘மாணவிகளை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்த சிவசங்கர் பாபா’ : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்?!

 

‘மாணவிகளை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்த சிவசங்கர் பாபா’ : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்?!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா கடந்த ஜூன் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னாள் மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

‘மாணவிகளை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்த சிவசங்கர் பாபா’ : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்?!

தற்போதுவரை சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதுக்குப் பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை சுட்டிக் காட்டி அவருக்கு ஜாமீன் கோரி வருகிறது சிவசங்கர் பாபா தரப்பு. இருப்பினும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

‘மாணவிகளை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்த சிவசங்கர் பாபா’ : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்?!

இந்நிலையில் சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்து வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சுஷில் ஹரி பள்ளியில் 2011, 2012 ,2013 படித்த மாணவர்களை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசங்கர் பாபாவுக்கு எதிராக இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தயாராகிவிட்டதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மீது சில நாட்களில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மூன்றாவது போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.