சிவசங்கர் பாபா அரசு மருத்துவமனையில் அனுமதி!

 

சிவசங்கர் பாபா அரசு மருத்துவமனையில் அனுமதி!

சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், டெல்லியில் அவரை கைது செய்தனர். இதனிடையே சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சிவசங்கர் பாபா அரசு மருத்துவமனையில் அனுமதி!

டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தமிழகம் அழைத்து வரப்பட்டார். செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் நேற்றிரவு அடைக்கப்பட்டார். சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், திடீர் உடல்நலக் குறைவால் சிவசங்கர் பாபா செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சிறையில் இருந்து சிறைத்துறை அதிகாரிகள் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்னர், சிவசங்கர் பாபாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.