இறந்த தந்தையை திருமணத்திற்கு அழைத்து வந்த பாசமிகு மகள்கள்!

 

இறந்த தந்தையை திருமணத்திற்கு அழைத்து வந்த பாசமிகு மகள்கள்!

சகோதரியின் திருமணத்திற்காக, உயிரிழந்த தந்தையை சிலையாக வடிவமைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் சகோதரிகள்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முதல் இரண்டும் மகள்களுக்கு திருமணம் நடந்துமுடிந்த நிலையில் எதிர்பாராத விதமாக செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்து எட்டு ஆண்டுகள் ஆகியும், அவரது செல்ல மகள் திருமணத்தில் செல்வம் இல்லாதது, அவரது குடும்பத்திற்கும் மணமகளான அவரது மகளுக்கும் மிகுந்த மனவருத்ததை ஏற்படுத்தியது.

இறந்த தந்தையை திருமணத்திற்கு அழைத்து வந்த பாசமிகு மகள்கள்!

மணமகளின் வருத்ததை போக்குவதற்காக 6 லட்சம் ரூபாய் செலவில், லண்டனில் பணிபுரியும் மூத்த சகோதரி புவனேஷ்வரி சிலிக்கானை கொண்டு தந்தையின் முழு உருவ சிலையை வடிவமைத்துள்ளார். இது கடைக்குட்டி சகோதரிக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கிறது. பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சிலிக்கான் மற்றும் ரப்பரை கொண்டு இந்த உருவ பொம்மையை தயாரித்துள்ளது.

இந்நிலையில் கடைசி சகோதரியும் மணமகளுமான லட்சுமி பிரபா மற்றும் அவரது உறவினர்கள் உயிருடன் இல்லாத தன் தந்தையின் சிலைக்கு முன்பு மணமக்கள் மாலை மாற்றிக், தாய், தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். அத்துடன் லட்சுமி பிரபா தன் தந்தையின் சிலையை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.