காபி டே நிறுவனத்தின் புதிய தலைவரானார் மறைந்த சித்தார்தா மனைவி!

 

காபி டே நிறுவனத்தின் புதிய தலைவரானார் மறைந்த சித்தார்தா மனைவி!

காபி டே நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக மறைந்த சித்தார்தாவின் மனைவி நியமிக்கப்பட்டுள்ளார். காபி டே நிறுவனரான சித்தார்தா கடன் பிரச்சினை காரணமாக மங்களூருவில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. காபி டே நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. காபி டே நிறுவனத்தை தொடங்கிய சித்தார்தா, பல்வேறு வங்கிகள் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தவில்லை என்பதால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கினார். அதையடுத்து கடந்த ஆண்டில் , ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் 2 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டது.

காபி டே நிறுவனத்தின் புதிய தலைவரானார் மறைந்த சித்தார்தா மனைவி!

அதையடுத்து காபி டே நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்த எஸ்.வி.ரங்கநாத் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது சித்தார்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே காபி டே நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவல்களை நிறுவனம் பங்குச் சந்தைகட்டுப்பாட்டு அமைப்புக்கு அனுப்பி உள்ளது.பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு காபி டே நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு போட்டியாக ஸ்டார்பர்க்ஸ், பாரிஸ்டா, கொக்கோ கோலாவின் கோஸ்டா காபி உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.