‘ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீளலாம்’.. மூலிகை மைசூர்பா விற்பனை செய்த கடைக்கு சீல்!

 

‘ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீளலாம்’.. மூலிகை மைசூர்பா விற்பனை செய்த கடைக்கு சீல்!

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா என்ற பெயரில் கோவையில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. கோவை சின்னியம்பாளையம் பகுதியில் இயங்கி வரக்கூடிய ஸ்வீட் கடை 19 மூலிகைகள் கொண்டு சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை மைசூர்பா கொரோனாவை ஒரே நாளில் குணப்படுத்தும் என நோட்டீஸ் அடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ முறை கொரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் மூலிகை மைசூர்பா கோவையில் பிரபலமாகியது.

‘ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீளலாம்’.. மூலிகை மைசூர்பா விற்பனை செய்த கடைக்கு சீல்!

அதனால், இன்று காலை மூலிகை மைசூர்பா கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும், இனிப்புக்கடையின் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், 18 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் மைசூர்பாவுக்கு சித்த மருத்துவத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அனுமதி அளிக்கவில்லை என்று கூறிய அதிகாரிகள், ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைவதாக மைசூர்பாவை விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும், அந்த கடையின் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.