மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்… முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

 

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்… முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

மத்திய பிரதேசத்தில் நேற்று நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே பா.ஜ.க.வால் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும். அதேசமயம் இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே காங்கிரசால் மீண்டும் ஆட்சியை அமைக்க முடியும். இதனால் மத்திய பிரதேச இடைத்தேர்தல் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்… முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை
முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் நேற்று 28 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. ஒட்டு மொத்த அளவில் இடைத்தேர்தலில் 66 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகின. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர். இந்த இடைத்தோ்தலில் பா.ஜ.க. பெரிய வெற்றியை பெறும் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்… முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை
ஆர்வத்துடன் வாக்களித்த மூத்த குடிமக்கள்

மத்திய பிரதேசத்தின் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், கோவிட்-19 பயத்தை வென்று மக்கள் வாக்களிக்க அதிகளவில் வந்தனர். இதுவே நமது ஜனநாயகத்தின் பலம். பெரிய அளவில் வாக்குப்பதிவு நடந்தது, பா.ஜ.க.வின் வெற்றியும் பெரிதாக இருக்கும். வாக்காளர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். அவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆர்வத்துடன் வாக்களித்தனர் என தெரிவித்தனர்.