வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கும் ஷிவானி ; பேசாமல் செல்லும் பாலா

 

வீட்டுக்குள் எண்ட்ரி  கொடுக்கும் ஷிவானி ; பேசாமல் செல்லும் பாலா

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 103 நாட்கள் ஆகின்றது. இறுதி போட்டிக்கு ஆரி, பாலா.ரியோ, சோம், ரம்யா மற்றும் கேபி ஆகியோர் தேர்வாகி இருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்துடன் கேபி வெளியேறினார். கேபியின் இந்த முடிவு மிகவும் சாமர்த்தியமானதாகவும், நல்ல முடிவாகவும் பார்க்கப்பட்ட நிலையில் ரியோ மட்டும் இடையில் சற்று குழப்பினார். தனக்கு வெளியில் போக வேண்டும் என்றும் பெட்டியை தன்னிடம் கொடுத்துவிடு என்றும் ரியோ அடம் பிடித்தது , கேபியை வெளியில் செல்ல விடாமல் இருக்க செய்த யுத்தி என்று கூறப்படுகிறது.

வீட்டுக்குள் எண்ட்ரி  கொடுக்கும் ஷிவானி ; பேசாமல் செல்லும் பாலா

தற்போது பிக் பாஸ் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சமையல் போட்டி, உறியடிக்கும் போட்டி என போட்டிகள் நடத்தப்பட்டது. தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் இறுதி நாட்களுக்காக வருகை தந்துள்ள நிலையில் வீடு களைக்கட்டியுள்ளது.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில், ஸ்டார் ரூமில் பாயின் உள்ளே அமர்ந்த படி ஷிவானி எண்ட்ரி கொடுக்கிறார். பிக் பாஸ் போட்டியிலிருந்து கடந்த வாரம் வெளியேறிய ஷிவானி, மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்போது ஷிவானி எல்லோருக்கும் ஹாய் சொல்லி கட்டியணைக்க, பாலாவை பார்த்து ஹாய் என்று சொல்கிறார். அதற்கு பாலா அமைதியாக நின்றுவிட்டு அங்கிருந்து சொல்லும்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.