“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

 

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் ‘நூரி’ என்ற எட்டு வயது பெண் நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிடந்தது .

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்


மும்பையில் தேவி ஷெத் என்ற பெண்ணுக்கு வியாழக்கிழமையன்று அவரின் சமூக ஊடகத்திற்கு ஒரு வீடியோ வந்தது .அதில் நூரி என்ற நாய் பொவாயில் உள்ள கேலரியா மாலில் வலியோடு ,ரத்த வெள்ளத்தில் கிடந்தது . இதனையடுத்து, அவர் தனது தாயார் மின்னுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார் .அப்போது அங்கு ஒரு பெண் நாய் தனது தனிப்பட்ட பகுதிகளில் 11 அங்குல மரக் கம்பி செருகப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார். உடனே அவர்கள் அந்த நாயை ‘என்ஜிஓ வேர்ல்ட் ஃபார் ஆல்’ஸ் கேர் சென்டருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர்கள் அந்த நாயின் தனிப்பட்ட பகுதிகளிலிருந்து தடியை அகற்றி சிகிச்சையளித்தனர் . இருப்பினும், அந்த நாயின்உடல் நிலை இன்னும் மோசமாக உள்ளது.
இந்த சம்பவம் பற்றி அதை மீட்ட தேவி கூறுகையில் “அந்த நாய் ரத்தவெள்ளத்தில் வலியோடு துடித்து கொண்டிருந்ததை கண்டு அங்கிருந்த பொது மக்கள் அனைவரும் அதை கண்டுகொள்ளாமல் சென்றது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது , ”என்று தேவி கூறினார்.

இந்த மிருகத்தனத்தை கண்டித்து ‘பம்பாய் விலங்கு உரிமைகள் (BAR)ஆணையம்’ பொவாய் போலீசில் புகாரளித்தன.இதைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்) மற்றும் 429 (ஒரு விலங்கைக் கொல்வதன் மூலம் அல்லது துன்புறுத்துவதன் மூலம் குறும்பு) வழக்கு பதிவு செய்யப்பட்டது.

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்