8 ஆண்டுகளாக… பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை : சிக்கிய பாதிரியார்!

 

8 ஆண்டுகளாக… பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை : சிக்கிய பாதிரியார்!

பிரபல பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல பாடகி, தனது மகளை சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் தனது தங்கை வீட்டில் தங்க வைத்துள்ளார். தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுவதால் சிறுமி சென்னையில் தனது சித்தியுடனேயே இருந்திருக்கிறார். சித்தியின் கணவர் ஜான் ஜெஷில், சித்தியின் உறவினர்கள் ஷகீனா ஷான், கிளாரோ ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

8 ஆண்டுகளாக… பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை : சிக்கிய பாதிரியார்!

இதுமட்டுமில்லாமல், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தேவாலயத்துக்கு சென்று வரும் போது அங்கிருக்கும் பாதிரியார் ஹென்றியும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் இது பற்றி சிறுமி தனது தாயாரிடம் சொல்லியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த பாடகி, சென்னை கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

8 ஆண்டுகளாக… பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை : சிக்கிய பாதிரியார்!

அந்த புகாரின் பேரில் அதிரடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், பாதிரியார் ஹென்றி உட்பட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுமியின் உறவினர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 8 ஆண்டுகளாக அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வருவதாக விசாரணையில் தெரிய வந்திருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.