சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… ஈரோட்டில் இருவர் போக்சோ சட்டத்தில் கைது!

 

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… ஈரோட்டில் இருவர் போக்சோ சட்டத்தில் கைது!

ஈரோடு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பவானி பகுதிகளில் சிறுமிகளை கடத்தி பாலியல் தொல்லை அளித்த 2 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் பர்கூர் ஒந்தனை பகுதியை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன். கட்டிட தொழிலாளி. இவருக்கு, அந்தியூர் தாசளியூர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில், மணிகண்டன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சில நாட்களுக்கு முன்பு சிறுமியை கடத்திச்சென்றுள்ளார். இதனால், மாணவியை மீட்டுத்தரக் கோரி அவரது பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… ஈரோட்டில் இருவர் போக்சோ சட்டத்தில் கைது!

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் ஒந்தனையில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பது தெரிய வந்ததால், நேற்று அங்கு சென்ற போலீசார் மணிகண்டன் மற்றும் சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வரவே, மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைதுசெய்தனர்.

இதேபோல், ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கௌரிசங்கர் (21) என்பவர், ரெட்டிபாளையத்தை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கௌரிசங்கரை கைது செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.