சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!

நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் விஜயராகவன் (55). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அச்சிறுமி தனது தாயுடன் கடைக்கு வந்த சமயத்தில் இவர் அந்த வேலையை செய்திருக்கிறார். ஆத்திரமடைந்த சிறுமியின் தாய், அவரை அடித்து உதைத்ததோடு அப்பகுதி காவல்நிலையத்திலும் விஜயராகவன் மீது புகாரளித்தார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!

அந்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீசார் முதியவர் விஜயராகவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!

குற்றஞ்சாட்டப் பட்டவர் தரப்பு வாதத்தையும் போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெபஜீவாவின் வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி இந்திராணி, விஜயராகவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.