‘சிறுமிக்கு பாலியல் தொல்லை’ கம்பி எண்ணும் மின்வாரிய அதிகாரி!

 

‘சிறுமிக்கு பாலியல் தொல்லை’ கம்பி எண்ணும் மின்வாரிய அதிகாரி!

திருவள்ளூர் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மின்வாரிய அதிகாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (54). இவர் சென்னை ஆலந்தூரில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ஆக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் மீது வெள்ளவேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘சிறுமிக்கு பாலியல் தொல்லை’ கம்பி எண்ணும் மின்வாரிய அதிகாரி!

வெள்ளவேடு அருகே இருக்கும் மேல்மனம்பேடு கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்த சுரேஷ், அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பணத்தை காட்டி ஆபாசமாக பேசியதாகவும் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார், சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு ஊழியர்களே இது போன்ற கீழ் தரமான செயல்களில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.