புதுச்சேரியில் கல்லூரி தேர்வுகள் ரத்து

 

புதுச்சேரியில் கல்லூரி தேர்வுகள் ரத்து

புதுச்சேரியில் வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த முதலாமாண்டு முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் கல்லூரி தேர்வுகள் ரத்து

புதுச்சேரியில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்துவருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்னிக்கை 1.20 லட்சத்தை கடந்தது. அங்கு கொரோனா மூன்றாம் அலையின் அறிகுறியாக குழந்தைகளுக்கு கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த முதலாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து என புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி இளநிலை, முதலாமாண்டு, இரண்டாமாண்டு, முதுநிலை முதலாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.