“சாத்தான்குளம் போல செல்வமுருகன் அடித்து கொலை ” : தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு!

 

“சாத்தான்குளம் போல செல்வமுருகன் அடித்து கொலை  ” : தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு!

சாத்தான்குளம் சம்பவம் போல செல்வமுருகன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

“சாத்தான்குளம் போல செல்வமுருகன் அடித்து கொலை  ” : தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு!

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “சாத்தான்குளம் போல விருத்தாசலத்தில் செல்வ முருகன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். விருத்தாச்சலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி செல்வமுருகனை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். தடையங்களை காவல்துறையினர் அழைத்ததாகவும் செய்திகள் வருகிறது. காவல்துறையினரின் மனித உரிமையை மீறி இந்த செயலுக்கு நீதி வேண்டும். செல்வமுருகன் மரணம் தொடர்பாக ஆய்வாளர் மீது 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். செல்வமுருகன் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்ற உத்தரவை வரவேற்கிறேன்”என்று கூறியுள்ளார்.

“சாத்தான்குளம் போல செல்வமுருகன் அடித்து கொலை  ” : தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு!

சாத்தான்குளம் சம்பவம் போல் பண்ருட்டியில் செல்வ முருகன் என்பவர் காவல்துறை தாக்கியதால் உயிரிழந்துள்ளதாகவும், காவல் ஆய்வாளர் ஆறுமுகம் என்பவரை கைது செய்ய வலியுறுத்தியும் ட்விட்டரில் #Arrest_Inspector_Arumugam எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.