திமுகவில் இணைகிறார் தமிழக அமைச்சரின் அண்ணன் மகன் கூவத்தூர் கிங்!
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம், திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவை பலப்படுத்துவதற்காக அக்கட்சி நிர்வாகிகள் பல்வேறு திட்டங்களை கையில் எடுத்துவருகின்றனர். இணையவழி உறுப்பினர்கள் சேர்க்கை, பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் என மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளை தற்போது திமுக தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் செங்கோட்டையனின் உடன் பிறந்த அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம் திமுகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும், அகில இந்திய மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளராகவும் இருக்கிறார். மருந்து விற்பனை மெயின் பிசினஸ் என்றாலும், செங்கோட்டையனின் அரசியலுக்கும் உடனிருந்து உதவுவதே இவரது சைடு பிசினஸ். கூவத்தூர் ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, அதன் பாதுகாப்புப் பணிகள் முழுவதையும் இந்த செல்வம்தான் மேற்கொண்டிருக்கிறார். செங்கோட்டையனுடன் சமீபத்தில் ஏதோ கருத்து மோதல் என்றும் அதனால் அவர் அதிமுகவிலிருந்து விலகி திமுக வசம் செல்லவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் செல்வம் திமுகவில் இணைய உள்ளார்