கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்னும் பண்ண முடியல ; செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு!

 

கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்னும் பண்ண முடியல ; செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் அனைத்தையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. நேற்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் அதிமுக ஆட்சியால் வருவாய் குறைந்துவிட்டதாகவும் ஒரு லட்சம் கோடி ரூபாய் எங்கேயோ சென்று விட்டதாகவும் அரசு துறைகள் பெரும் நஷ்டம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்னும் பண்ண முடியல ; செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு!

ஏற்கனவே அதிமுக அரசின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளால் கடுப்பில் இருந்த அதிமுக தலைமை, தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதால் கொதித்தெழுந்துள்ளது. அதிமுகவினரை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது. ஆட்சி அதிகாரத்தால் மம்மதையில் ஆடும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என அதிமுகவின் முக்கிய புள்ளிகள் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்தும் ரெய்டு நடத்தப்படுவது குறித்தும் பேசினார். அப்போது, அதிமுகவை கருணாநிதியாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. நிதியமைச்சர் தன்னுடைய விளம்பரத்திற்காக வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். வெடிகுண்டு என நினைத்து வெளியிட்ட வெள்ளை அறிக்கை புஸ்வாணம் ஆகிவிட்டது என்றார். மேலும், அதிமுக காலத்தில் திமுகவினர் தங்களது கரை வேட்டிகளை பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டார்கள் என்றும் 2026 ஆம் ஆண்டுக்கு முன்னரே தேர்தல் வரக்கூடும், அப்போது அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும் தெரிவித்தார்.