ஆறு திருமணம் செய்து கொண்ட சாமியார் -மேலும் 32 பெண்களுக்கு குறி வைத்த அதிர்ச்சி தகவல்

 

ஆறு திருமணம் செய்து கொண்ட சாமியார் -மேலும் 32 பெண்களுக்கு குறி வைத்த அதிர்ச்சி தகவல்

ஆறாவது திருமணம் செய்து கொள்ளவிருந்த ஒரு சாமியார்  கைது செய்யப்பட்டார்

ஆறு திருமணம் செய்து கொண்ட சாமியார் -மேலும் 32 பெண்களுக்கு குறி வைத்த அதிர்ச்சி தகவல்

உ.பி. யின் கான்பூரில் வசிக்கும் அனுஜ் கேத்ரியா தன்னை ஒரு சாமியார் என்று கூறி ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார் .அவர் 2005 ஆம் ஆண்டில் முதன்முறையாக திருமணம் செய்து கொண்டார் .. மெயின்பூரி மாவட்டத்தில் வசிக்கும் அவரது முதல் மனைவியோடு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போதே அவர் ,2010 ஆம் ஆண்டில்,  பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார்,.பிறகு அவரும்  விவாகரத்து கோரினார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அவுரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். பின்னர் அவர் தனது மூன்றாவது மனைவியின் உறவினரை மணந்தார், அவர் அணுஜின் முந்தைய திருமணங்களைப் பற்றிய உண்மையை அறிந்த பின்னர் தற்கொலை செய்து கொண்டார் .

அனுஜ் 2019 இல் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

அவர் தனது ஐந்தாவது மனைவியிடம் தனது மற்ற திருமணங்களைப் பற்றி சொல்லவில்லை. திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, அவர் அவரை கொடுமைப்படுத்த  தொடங்கினார்,அதனால் அவர் கடந்த ஆண்டு சாகேரி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார். இந்நிலையில் அனுஜ் ஆறாவதாக வேறொரு பெண்ணை மணக்க திட்டமிட்டிருந்தது போலீசுக்கு தெரிய வந்தது .அதனால் அவரை கான்பூரில் கைது செய்தனர் .வெள்ளிக்கிழமை வரை, அனுஜ் திருமணம் செய்யும்  ஆசையில்  மேலும் 32 பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அனுஜ் கைது செய்யப்பட்ட பின்னர் , ஷாஜகான்பூரில் உள்ள சிறைக்கு அனுப்பப்பட்டார்,