டெம்போ மீது லாரி மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்

 

டெம்போ மீது லாரி மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்

சேலம்

சேலம் அருகே டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சாலைப்பணியாளர்கள் மூவர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 10-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் டெம்போ வாகனத்தில் சென்றனர். சேலம் விமான நிலையம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டெம்போ வாகனம் மீது எதிரே வந்த சரக்கு லாரி மோதியது.

டெம்போ மீது லாரி மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்

இந்த விபத்தில் டெம்போவில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.