எட்டு வழிச்சாலைத்திட்டம் : வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Jul 20, 2020, 13:34 IST1595232296000
சேலத்தில் இருந்து சென்னை வரை எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு அரசியல் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்னை- மதுரை இடையே நெடுஞ்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விதிகளை மீறி சென்னை-சேலம் எட்டுவழிசாலையை அமைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை காணொளி வாயிலாக விசாரித்தது. அப்போது வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.