ஆக்கிரமிப்பு இடத்தில் கேளிக்கை பூங்கா.. மூடப்படுகிறதா கிஷ்கிந்தா?

 

ஆக்கிரமிப்பு இடத்தில் கேளிக்கை பூங்கா.. மூடப்படுகிறதா கிஷ்கிந்தா?

கிஷ்கிந்தா அமைந்துள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை மீட்க சட்டப்போராட்டம் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு இடத்தில் கேளிக்கை பூங்கா.. மூடப்படுகிறதா கிஷ்கிந்தா?

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில், மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது, அடுத்த மானிய கோரிக்கைக்குள்ளாக 50% அளவிற்கு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட, மொட்டைக்கு இல்லை கட்டணம் உள்ளிட்ட 5 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரி அமைந்திருக்கும் இடம் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரம் இல்லை. அதேபோல் தாம்பரம் அருகிருக்கும் கிஷ்கிந்தா இடம், ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் மூலம் உருவான நிலம், கிஷ்கிந்தாவிற்கு சொந்தமான 177 ஏக்கர் நிலமும் இந்து அறநிலையல் துறைக்கு சொந்தமான நிலம் தான். இதுகுறித்து, இன்னும் ஒரு வாரத்தில் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து, சட்டப்போராட்டம் நடத்தி, அது கோவில் நிலம் தான் என்று உறுதிபடுத்தி, நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறினார்.