திருவொற்றியூரில் 3ம் இடத்தில் சீமான்.. தொண்டர்கள் அதிர்ச்சி!

 

திருவொற்றியூரில் 3ம் இடத்தில் சீமான்.. தொண்டர்கள் அதிர்ச்சி!

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக முன்னிலை வகித்தது.

திருவொற்றியூரில் 3ம் இடத்தில் சீமான்.. தொண்டர்கள் அதிர்ச்சி!

இதைத் தொடர்ந்து, முதல் சுற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் திமுக 132 இடங்களிலும் அதிமுக 96 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மக்கள் நீதி மையம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை.

இந்த நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் கே குப்பன் முன்னிலையில் உள்ள நிலையில், சீமான் மூன்றாமிடத்தில் உள்ளார். இது முதல் சுற்றின் முடிவுகள் தான். இறுதியில் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். சீமானுக்கு சட்டசபைக்குள் இடம் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.