ஜாதியும், மதமும் பாஜகவுக்கு இரு கண்கள்- சீமான்

 

ஜாதியும், மதமும் பாஜகவுக்கு இரு கண்கள்- சீமான்

பாஜகவுக்கு ஜாதியும், மதமும் இரு கண்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கரும்பு விவசாயி சின்னத்தில் அனைவரும் வாக்களித்து நமது வேட்பாளர்களை வெற்றிப்பெற செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு இது வழக்கமான தேர்தல். ஆனால் எங்களுக்கு புரட்சி போர்க்களம். அவர்கள் தேர்தலாக பார்க்கிறார்கள். நாங்கள் மாறுதலாக பார்க்கிறோம்.

ஜாதியும், மதமும் பாஜகவுக்கு இரு கண்கள்- சீமான்

பாரதிய ஜனதாவுக்கு ஜாதியும் மதமும் இரு கண்கள். நகை கடன் தள்ளுபடி என்கிறீர்கள், கடன் ஆக காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தேர்தலுக்காக கடனை தள்ளுபடி செய்கிறார்கள். இலவசங்கள் வழங்குவது அவமானம் இல்லையா, இது என்ன ஆட்சி? என மக்கள் சிந்திக்க வேண்டும். இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு பிச்சைப்போடுகிற்ன்றனர். தமிழகத்தில் மதவாதக்கட்சிகளை காலூன்ற செய்து மூன்றாவது அணியான பாஜக உருவாக காரணமாக இருப்பது திமுக தான்” என சாடினார்.