விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை.. அடித்துச் சொல்லும் சீமான்!

 

விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை.. அடித்துச் சொல்லும் சீமான்!

சின்ன கலைவாணர் என திரையிலகமே போற்றும் விவேக் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ ஆபரேஷன் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை.. அடித்துச் சொல்லும் சீமான்!

விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட முன்தினம் தான் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அந்த தடுப்பூசியால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பலர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த சுகாதாரத்துறையினர், விவேக் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென கூறியுள்ளனர். இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கும் நெட்டிசன்கள், தடுப்பூசியால் தான் அவர் உயிரிழந்து விட்டதாக கூறி வருகின்றனர்.

விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை.. அடித்துச் சொல்லும் சீமான்!

இந்த நிலையில், தடுப்பூசியால் விவேக் உயிரிழக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவர்களிடம் விசாரித்த வரை விவேக்கிற்கு மாரடைப்பு பிரச்சனை இருந்துள்ளது அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஊசி போட்டதால் அந்த பிரச்சனை கூடுதலாக இருக்கலாமே தவிர தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று கூறினார்.

இதைதொடர்ந்து வேளச்சேரி மறுவாக்குப்பதிவு குறித்து பேசிய அவர், தேர்தல் ஆணையம் எனப்படும் அந்த நாடகக் குழு பணப்பட்டுவாடா செய்பவர்களை விட்டுவிட்டு மருத்துவமனைக்கு செல்பவர்கள், மளிகை கடைக்கு செல்பவர்களை எல்லாம் பிடித்து நடவடிக்கை எடுக்கிறது என்று விமர்சித்தார்.