“இந்த கையில ஆட்சி… அந்த கையில ஜேசிபி; மொத்த டோல்கெட்டும் காலி” – சீமான் ஆவேசம்!

 

“இந்த கையில ஆட்சி… அந்த கையில ஜேசிபி; மொத்த டோல்கெட்டும் காலி” – சீமான் ஆவேசம்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதனை மிகச் சுலபமாக தீர்க்கும் வழிமுறையைக் கூறுவார். ஆனால் அவை நடைமுறையில் சாத்தியமா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். தமிழ்நாட்டு காவல் படையைக் கொண்டு கச்சத்தீவை மீட்பேன் என்று அவர் சொன்னது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். அந்த வகையில் சீமானுக்கு சுங்கச்சாவடிகள் மீது ஒரு கண். அதை அடித்துவிடுவேன்… நொறுக்கிவிடுவேன் என அவ்வப்போது கூறி பகீர் கிளப்புவார்.

“இந்த கையில ஆட்சி… அந்த கையில ஜேசிபி; மொத்த டோல்கெட்டும் காலி” – சீமான் ஆவேசம்!

அந்த வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “சுங்கக் கட்டணம் வசூலித்தால், சாலைக்கென்று எதற்குத் தனி வரி வசூலிக்கிறார்கள். சாலைகள் போடப்பட்டால் அதற்கான செலவுக்கென ஒரு அறிக்கைத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அதைப் போலவே எத்தனை ஆண்டு காலம் சுங்கம் வசூலிக்கப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதையும் கூட ஏன், தனியார் முதலாளிகள் ஏலம் எடுத்து வசூலிக்கிறார்கள்? என் கையில் ஆட்சியைக் கொடுத்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ளா அனைத்து சுங்கச்சாவடிகளையும் ஒரே இரவில் ஜேசிபியை கொண்டு தகர்த்து விடுவேன்.

“இந்த கையில ஆட்சி… அந்த கையில ஜேசிபி; மொத்த டோல்கெட்டும் காலி” – சீமான் ஆவேசம்!

என் மாநில சாலைகளை நான் பராமரித்துக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இங்கு யாருக்கும் தைரியம் இல்லை” என்றார். சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று காலை, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அவர் நினைவைப் போற்றும் நிகழ்வில் சீமான் கலந்துகொண்ட போது இதனை தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலை குறித்து பேசுகையில், “எரிபொருட்களை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்தால் அது பெரு முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்காது. அதனால் அதைக் கொண்டு வர மாட்டார்கள்” என்றார்.