“காசு கொடுப்பவன் பாவி… வாங்கி குத்துபவன் தேச துரோகி” – டைமிங்கில் ரைமிங் அடித்த சீமான்!

 

“காசு கொடுப்பவன் பாவி… வாங்கி குத்துபவன் தேச துரோகி” – டைமிங்கில் ரைமிங் அடித்த சீமான்!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைத்திலும் ஸ்பீடாக இருக்கிறார். வேட்பாளர் தேர்வு, தனித்துப் போட்டி என தீவிரமாகச் செயல்பட்டு இரு பெரும் திராவிடக் கட்சிகளையே அசரடித்துக் கொண்டிருக்கிறார். 234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய கையோடு பிரச்சாரத்திலும் இறங்கிவிட்டார். மேடைப் பேச்சு என்றாலே சீமான் தட்டி தூக்கிவிடுவார். பிரச்சாரம் என்றால் சொல்லவா வேண்டும். சீமானின் நாக்கில் எதுகை மோனை விளையாடுகிறது.

“காசு கொடுப்பவன் பாவி… வாங்கி குத்துபவன் தேச துரோகி” – டைமிங்கில் ரைமிங் அடித்த சீமான்!

இன்று கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளர் நிரந்தரியை ஆதரித்து சீமான் கிருஷ்ணகிரியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லாத நாடு இந்தியா. துறைமுகம், சாலை பராமரிப்பு, கல்வி, மருத்துவம், ஆயுத உற்பத்தி உள்ளிட்ட அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்துவிட்டார்கள். ஓட்டுக்கு காசு கொடுக்கிறவன் பாவி, அந்த காசை வாங்கிக் கொண்டு ஒட்டு போடுவரவன் தேச துரோகி. பணநாயகம் வீழ்ந்து ஜனநாயகம் வெல்ல ஒரு முறை விவசாய சின்னத்தின் வாக்களியுங்கள்” என்றார்.