“ஓட்டு போடுங்கள் ; இல்லாவிட்டால் சுடுகாட்டில் போடுங்கள்” : சீமான் கதறல்

 

“ஓட்டு போடுங்கள் ; இல்லாவிட்டால் சுடுகாட்டில் போடுங்கள்” : சீமான் கதறல்

நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது வரலாற்றின் மாபெரும் புரட்சி என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் பரப்புரை மேற்கொண்டு வரும் நாம் தமிழர் கட்சியின் சீமான், “பிளாஸ்டிக் இல்லாத நாட்டை நீங்கள் உருவாக்குங்கள். நான் சொல்வதை திரும்ப திரும்ப சொல்லாதீர்கள் .அவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்து கொண்டு இன்னமும் பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று கூறுவது நியாயமா?

“ஓட்டு போடுங்கள் ; இல்லாவிட்டால் சுடுகாட்டில் போடுங்கள்” : சீமான் கதறல்

நான் எழுப்புகிறேன் ;எந்திரிக்கவே மாட்டேன் என்று கூறுபவர்களை நாம் எதுவும் செய்ய முடியாது. நான் ஓட்டுக்காக நிற்கவில்லை; நாட்டுக்காக நிற்கிறேன். நான் வாக்கை கேட்கவில்லை; வருங்கால தலைமுறைகளுக்கான வாழ்க்கையை கேட்கிறேன். அவர்கள் எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள் . விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள். வருங்கால தலைமுறைக்கு வாழவைப்போம்”என்றார்.

“ஓட்டு போடுங்கள் ; இல்லாவிட்டால் சுடுகாட்டில் போடுங்கள்” : சீமான் கதறல்

“எங்களுக்கு ஓட்டு போடுங்கள்; உதய சூரியன் இரட்டை இலை பிடிக்கும் என்றால் எங்களை சுடுகாட்டில் போடுங்கள்.சீமானுக்கு ஓட்டு போட்டால் ஒரு கோடி ரூபாய் போய்விடுமா?திமுகவின் வெற்றி என்பது ஒரு நிகழ்வு .ஏற்கனவே நின்று வென்றிருக்கிறார்கள். ஆனால் மாற்றம் என்பது ஒன்றுமில்லை. அதிமுக வெற்றியும் அதேபோல் ஒரு நிகழ்வு தான் .ஆனால் நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது வரலாற்றின் மாபெரும் புரட்சி . எந்த அரசியல் பின்புலமும் இல்லை ;அப்பன் தலைவன் இல்லை; வாரிசு அரசியலுக்கு வரவில்லை ,பொருளாதாரப் பின்புலம் என்று ஒன்றுமில்லை, எளிய மக்கள் நாங்கள் முன்னெடுப்பது தான் புரட்சி.ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது எந்த மாற்றமும் நிகழவில்லை இந்த தேர்தலில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்” என்றார்.