காட்டு யானை தாக்கி காவலாளி பரிதாப பலி!

 

காட்டு யானை தாக்கி காவலாளி பரிதாப பலி!

சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் காவலாளி உயிரிழந்துள்ளார்.

அண்மைக்காலமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் காட்டு யானை தாக்கி, பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில், சத்தியமங்கலம் வனச்சரகம் கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அட்டணை கிராமத்தை சேர்ந்த சடையப்பன் என்பவருக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்ட தோட்டத்தில் பெரியசாமி (45) இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

காட்டு யானை தாக்கி காவலாளி பரிதாப பலி!

தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை, அவரை தூக்கி வீசியுள்ளது. இதில் காயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அச்சமயம் பெரியசாமியுடன் இருந்த சடையப்பனையும் யானை தாக்கிய நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.